பிளஸ்டூ தேர்வு- எப்போதும் போல இப்போதும் "ஜே" போட்ட மாணவிகள்!
சென்னை: ப்ளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. வழக்கம் போல இந்த முறையும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவை அரசு இணையதளங்களிலும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும், படித்த பள்ளிகளிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 மாணவ - மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது.
இந்த முறையும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவையின் சவுடேஸ்வரி பள்ளியின் நிவேதிதா என்ற மாணவியும், திருப்பூரின் விகாஸ் வித்யாலயா பள்ளியின் பவித்ரா என்ற மாணவியும் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்
பள்ளி மாணவர்கள் இணையதளம் வழியாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் இன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications