1088 மதிப்பெண் எடுத்த பிளஸ்-2 மாணவி தற்கொலை கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை அருகே பிளஸ்-2 தேர்வில் 1088 மதிப்பெண் எடுத்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.
கோவை: பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று மனம் நொந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் திவ்யா என்கிற தாமரைச்செல்வி. இவர் தந்தை வேலை பார்த்த பள்ளியிலேயே பிளஸ்-2 படித்தார். பிளஸ்-2 தேர்வில் மாணவி திவ்யா 1200-க்கு 1088 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் அவர் 1150 மதிப்பெண்ணுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் என்று தெரிகிறது.

மேலும், அவருடன் படித்த தோழிகள் பலர் 1150-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தனர். தனக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் திவ்யா கடந்த 2 நாட்களாக மனவருத்தத்துடன் காணப்பட்டார். வீட்டில் உள்ளவர்களுடனும், தோழிகளுடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.
எதிர்பார்த்ததை விட குறைவாக மதிப்பெண் எடுத்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த திவ்யா நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்த தாயார் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய போது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த செட்டிப்பாளையம் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications