சென்னையில் முதல் முறையாக மத்திய அரசின் நெசவாளர் விருது வழங்கும் விழா.. பிரதமர் மோடி ஆக.7-ல் வருகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முதல் முறையாக மத்திய அரசின் கைத்தறி நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வருகை தருகிறார்.

மத்திய ஜவுளித் துறை சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 7-ந் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.

PM Modi to visit Chennai on Aug 7

வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இந்த விழா முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய ஜவுளித் துறை செயலாளர் சஞ்சய் குமார் பாண்டா, மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் எச். நாகேஷ் பிரபு உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நேற்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் ஆய்வு செய்தனர்.

அரங்கில் உள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் ஓய்வறைகள், சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வசதிகள் குறித்தும் பல்கலைக்கழக அலுவலர்களிடம் மத்திய அரசு அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+