குளச்சல் துறைமுகத்துக்கு ஜெ. முன்னிலையில் மோடி அடிக்கல் நாட்டுவார்...: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: குளச்சல் துறைமுகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.25 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய சர்வதேச துறைமுகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குளச்சலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் விழிஞ்ஞத்திலும் புதிய துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. எனவே குளச்சலில் துறைமுகம் அமைவதை கேரளா விரும்பவில்லை.
எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஒரு குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினார்கள்.
ஆனால் கேரளாவின் கோரிக்கையை மோடி நிராகரித்தார். குளச்சலில் துறைமுகம் அமைப்பது உறுதி என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் துறைமுக பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கேரள முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றியை கூறி கொள்கிறோம். இரு துறைமுகங்கள் அருகருகே அமைவதால் எந்த பிரச்சனையும் இல்லை. குளச்சலில் துறைமுகம் அமைவதால் விழிஞத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. அடிக்கல் நாட்டு விழா ஓரிரு மாதங்களில் நடக்கும். மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்றார்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications