அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படட்டும்: முஸ்லீம்களுக்கு மோடி ரமலான் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: புனித ரமலான் நோன்பு துவங்கியுள்ளதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி முஸ்லீம்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புனித ரமலான் நோன்பு இன்று துவங்கியுள்ளது. இதையொட்டி முஸ்லீம்கள் நேற்று இரவு தராவிஹ் தொழுதனர். இதற்கிடையே கேரளாவில் மட்டும் நோன்பு நேற்று துவங்கியது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ரமலான் துவங்கியுள்ள இந்த வேளையில் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வர பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்டை மோடி நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications