2016ல் அதிமுக – திமுக தவிர்த்து பாமக தலைமையில் கூட்டணி: ராமதாஸ் அறிவிப்பு
சென்னை: 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமையும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக, அதிமுக கட்சிகள் அல்லாத கூட்டணியாக அந்தக் கூட்டணி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இதனை தெரிவித்தார். மேலும் அவர், தமிழகத்தில் முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்று 36 நாட்களாகியும், அரசுப் பணிகள் முடங்கியே இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டிய பணிகளில் அவர் கவனம் செலுத்தாவிட்டால், அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், 2016ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்றும் அரசியல் நாகரீகம் காரணமாகவே தமது பேத்தியின் திருமணத்திற்கு கட்சித் தலைவர்கள் வந்திருந்ததாவும் விளக்கம் அளித்துள்ளார்.
சுரங்க முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், சகாயம் தலைமயில் குழு அமைக்க தமிழக அரசு முன்வரவில்லை எனவும் நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதியும் மதிமுக, பாமக திமுகவுடன் இணைய முன்வந்தால் கட்சி பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை காங்கேயத்தில் நடைபெற்ற ஈரோடு கணேசமூர்த்தி இல்ல விழாவில் அவர் பங்கேற்று பேசும்போது, "திமுகவுடன் கூட்டணி என்று ஒருபோதும் கூறியது கிடையாது" என்றார்.
அதனைத் தொடர்ந்து இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், திமுக, அதிமுக கட்சிகள் அல்லாத கூட்டணி பாமக தலைமையில் அமையும் என ஒரே போடாக போட்டுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications