Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி: மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் கோரிக்கை நிறைவேறும் வரை 1000 வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் -வீடியோ

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெறுகிறது.

    காவிரி நதியை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை 6 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 6 வாரங்கள் ஆகியும் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

    கருப்பு கொடி கட்டி

    கருப்பு கொடி கட்டி

    நேற்றுடன் நீதிமன்றம் விதித்த கெடுவும் நிறைவடைந்துவிட்டது. இதனால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

    இந்த போராட்டம்

    இந்த போராட்டம்

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாமகவினர் 1000 வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். தமிழகத்தின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

    எதிர்ப்பு தெரிவித்து

    எதிர்ப்பு தெரிவித்து

    அதுபோல் சென்னை தி நகரில் உள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வீட்டிலும் கருப்பு கொடி பறக்கிறது. மேலும் வேலூர் அலுமேலுரங்காபுரம் மற்றும் காகிதபட்டறை பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படுகிறது.

    சாலை மறியல்

    சாலை மறியல்

    திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    1000 கிராமங்களில் கருப்பு கொடி

    1000 கிராமங்களில் கருப்பு கொடி

    உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் ,சிங்கபுரம், விலாரி பாளையம், பொன்னாரம்பட்டி, கொட்ட வாடி, தாண்டானூர் உள்பட பல கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட பாமகவினரின் வீடுகளில் கருப்பு கொடியேற்றி கண்டன தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+