சட்டசபை தேர்தலுக்கே இல்லை, உள்ளாட்சி தேர்தலுக்கா கூட்டணி?, நெவர்: அன்புமணி
சென்னை: சட்டசபை தேர்தலை போன்றே உள்ளாட்சி தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்கப் போவது இல்லை என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாமக அதன் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. மேலும் பாமக எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது.
மாற்றம், மாற்றம் என்று முழங்கிய பாமக ஆட்சியை பிடிப்பதில் நம்பிக்கையுடன் இருந்தது.

தோல்வி தான்
சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆவார் என்ற பாமகவின் எதிர்பார்ப்பு வீணாகிப் போனது. ஆளும்கட்சியான அதிமுகவே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

உள்ளாட்சி தேர்தல்
சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக செயல்பட்டு வருகிறது.

பாமக
சட்டசபை தேர்தலிலேயே யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலிலா கூட்டணி வைப்போம். இல்லை, தனியாகத் தான் போட்டியிடப் போகிறோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்
சட்டசபை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. அதுவே நேர்மையாக நடக்கவில்லை. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சி தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது தெரியவில்லை என்கிறார் அன்புமணி.












Click it and Unblock the Notifications