For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போயஸ் கார்டன் எனக்கு தான் சொந்தம்... தீபா வருகையால் பரபரப்பு

போயஸ் கார்டன் தனக்குதான் சொந்தம் என்று கூறிக் கொண்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அங்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் கார்டனுக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு ஜெ.தீபா அங்கு நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர்.

Poes garden is mine, says J.Deepa

இந்நிலையில் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வீடு தனக்கு தான் சொந்தம் என்று கூறிக் கொண்டு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்திற்கு வந்தார்.

மேலும் கார்டனுக்குள் நுழைய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் சொத்து குறித்து பேச்சு எழுந்தபோது அத்தையின் பேனா மட்டும் எனக்கு போதும் என்று கூறிய தீபா இவ்வாறு சொந்தம் கொண்டாடி கொண்டு போயஸ் கார்டன் சென்றது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Jayalalithaa's niece Deepa has gone to Poes Garden saying that Veda Illam belongs to her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X