வேடசந்தூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை தாக்கியதாக இந்து முன்னணியினர் கைது
இந்து மக்கள் கட்சி நிர்வாகியை தாக்கியதாக இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேடசந்தூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகி முரளிதரனை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செய்தித் தொடர்பாளர் முரளிதரன் வேடசந்தூரில் வசித்து வருகிறார். இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை ஃபேஸ்புக்கில் முரளிதரன் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதை இந்து முன்னணி நிர்வாகிகள் ரெங்கசாமி, சந்தானம் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டபோது தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் இந்து முன்னணியின் ரெங்கசாமி, சந்தானம் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications