திருடர் குல திலகங்கள்.. 50 சைக்கிள்களைத் திருடிய 4 "திகில் பாண்டிகள்" கைது!
விலை உயர்ந்த 50 சைக்கிள்களை திருடி சாதனை படைத்த திருடர் குல திலகங்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையில் 49 சைக்கிள்களைத் திருடிய 4 திருடர்கள், 50வது சைக்கிளைத் திருடியபோது சிக்கிக் கொண்டனர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து 49 சைக்கிளை திருடியவர்கள் 50 சைக்கிளை திருடிய பின்னர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
சென்னை அசோக்நகரை சேர்ந்தவர் ராஜன். இவர் இம்மாதம் 11ம் தேதி நாராயணன் சாலையில் உள்ள ஒரு பள்ளிக்கு சைக்கிளில் சென்றார். அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு வந்த வேலையை முடிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது விட்டுச் சென்ற இடத்தில் சைக்கிள் அபேஸ் ஆகியுள்ளது கண்டு திடுக்கிட்டார்.

பள்ளி வளாகத்தில் சுற்றி சுற்றி பார்த்தும் சைக்கிள் கிடைக்காததால் அசோக் நகர் காவல் நிலையத்தில் சைக்கிள் காணவில்லை என்று ராஜன் புகார் அளித்தார். இதனையடுத்து, அசோக் நகர் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் சைக்கிள் திருடும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையின் போது, அசோக் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, எர்ணாவூர் 47பிளாக் பகுதியை சேர்ந்த 39 வயதான செந்தில், மணலி புது நகரை சேர்ந்த 35 வயதான அக்பர், கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயதான குமார், தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த 32 வயதான முத்துக்கனி ஆகியோர் கும்பலாக சைக்கிளை திருடி விற்றது தெரிய வந்தது.

இந்த நான்கு பேரும் திருட்டில் யார் யார் எந்தெந்த வேலையை செய்ய வேண்டும் என்று பிரித்துக் கொண்டனர். அதன்படி, திருடும் வேலையை அக்பரும் செந்திலும் செய்தனர். மற்ற இருவரும் சைக்கிளை விற்பனை செய்யும் வேலையை செய்துள்ளனர்.
இவர்கள் சைக்கிள் திருடுவதற்கு வைத்துள்ள ஒரே கட்டுப்பாடு அது விலை உயர்ந்த சைக்கிளாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். அதற்காக விலை உயர்ந்த சைக்கிள் எங்கு கிடைக்கும் என்று தேடித் தேடி திருடி வந்தனர். பள்ளிக் கூடங்கள், டியூஷன் சென்டர், பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் அகிய இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி கஷ்டப்பட்டு இந்த 50 சைக்கிளையும் திருடியுள்ளனர் இந்த நால்வரும்.

இந்த 4 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த 50 சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அவர்கள் மீது எம்ஐஆர் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications