மதன் முகத்தில் காயங்கள்... போலீசார் 'கவனிப்பு'?
சென்னை: நேற்று கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் வேந்தர் மூவீஸ் மதனின் முகத்தில் காயங்கள் காணப்பட்டன. போலீசார் அவரை அடித்திருப்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
எஸ்.ஆர். எம். மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் வாங்கித் தருவதாக கூறி 84 கோடி ரூபாயை மாணவர்களிடம் மோசடி செய்ததாக மதன் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. புகார் வெளியாவதற்குள் சத்தமின்றி தலைமறைவாகிவிட்டார் மதன். கிட்டத்த 6 மாதங்களுக்கு மேல் போலீசுக்கு 'தண்ணி' காட்டிவிட்டார்.

அவரை இந்தியா முழுவதும் போலீசார் தேடியலைந்தனர். ஒருவழியாக நேற்று கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், மதனை சில தினங்களுக்கு முன்பே போலீசார் பிடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரைக் 'கவனிக்க வேண்டிய விதத்தில்' கவனித்து விஷயங்களைக் கறந்த பிறகுதான் வெளியில் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கவனிப்புக்கு அடையாளமாக மதனின் முகத்தில் இடது பக்கத்தில் காயங்கள் தெரிகின்றன.
நேற்று மாலை நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டபோது, இந்த காயங்கள் குறித்து மதனிடம் நீதிபதி கேள்வி கேட்டார். இந்த காயம் எப்படி ஏற்பட்டது? உடலில் வேறு காயங்கள் உள்ளனவா? என்று கேட்டபோது, அப்படியெல்லாம் ஏதுமில்லை என்று கூறிவிட்டார் மதன்.












Click it and Unblock the Notifications