நிலைமை கைமீறிவிட்டது... எங்கள் கட்டுப்பாட்டில் யாரும் இல்லை... கைவிரித்த இஸ்லாமிய கூட்டமைப்பு
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இது போன்று போராட்டம் நடப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அரசு மீது சட்டமன்றத்தில் வழக்கமாகவே திமுக எகிறும், இதில் தடியடி விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அரசை உலுப்பி எடுத்து விடும் என்பதால் போராட்டத்தை நேற்றிரவோடு முடிவுக்கு கொண்டு வர சென்னை மாநகர காவல்துறை தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரிலும், அலைபேசி மூலமும் அழைத்துப் பேசிய மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேசியுள்ளார். ஆனால் தற்போதைய சூழலில் எந்த தலைவரின் கட்டுப்பாட்டிலும் போராட்டங்கள் நடக்கவில்லை என்றும், வெள்ளிக்கிழமை இரவு போலீசார் நடந்துகொண்ட விதத்தால் தான் நிலைமை இவ்வளவு தூரம் சென்றதாகவும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை வடக்கு காவல் ஆணையர் கபில் சரத்கரும், போராட்டத்தின் போது பணியில் இருந்த விஜயகுமாரி ஐ.பி.எஸ்.சும் வெள்ளிக்கிழமை இரவு தடியடி நடத்துவதற்கு முன்பு இதுபோன்று அழைத்துப்பேசி சுமூக தீர்வு காண முயற்சித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தன்னெழுச்சியாக போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் தங்கள் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள் எனக்கூறி கைவிரித்துள்ளனர். தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இது தொடர்பாக மேலிடத்துக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக வெள்ளிக்கிழமை ஒரு நாளோடு முடியவிருந்த போராட்டத்தை, தடியடி பிரயோகம் செய்து தமிழகம் முழுவதும் பதற்றத்தை பற்ற வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது முதல்வர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications