தவறாக ஜெராக்ஸ் எடுத்ததால் ஆத்திரம்... மாணவியின் தலைமுடியை கொத்தாக பிடுங்கி எறிந்த வேலூர் ஆசிரியர்
வேலூர்: வேலூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியின் தலைமுடியை கொத்தாக பிடுங்கி எறிந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவியருக்கு தமிழ்ப்பாடம் எடுத்து வருகிறார் கணேசன் என்ற ஆசிரியர். இவர் நேற்று மதியம் தனது வகுப்பு மாணவி சங்கவி என்பவரிடம் தமிழ் பாடத்தின் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய தொகுப்பில் இருந்து, மூன்று பக்கங்களை மட்டும், 'ஜெராக்ஸ்' எடுத்து வரும்படி கூறியிருக்கிறார்.

ஆனால், அம்மாணவியோ தவறுதலாக அந்தத் தொகுப்பில் இருந்த அனைத்து பக்கங்களையும் ஜெராக்ஸ் எடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், மற்ற மாணவிகள் முன்னிலையிலேயே சங்கவியை திட்டியுள்ளார்.
பின் சங்கவின் முன்பக்க தலைமுடியைப் பிடித்து அவர் இழுத்துள்ளார். இதில் கொத்தாக ஒரு பகுதி முடிகள் அவரது கையோடு வந்து விட்டன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அம்மாணவி, வலியில் அலறியபடி மயங்கியுள்ளார்.
உடனடியாக முகத்தில் தண்ணீர் தெளித்து அம்மாணவியை எழுப்பிய கணேசன், இது தொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
ஆனால் மாலையில் வீடு திரும்பிய சங்கவி, பள்ளியில் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கவியின் பெற்றோர், கணேசன் மீது நாட்றம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த திருப்பத்துார் கல்வி மாவட்ட அலுவலர் பிரியதர்ஷிணி, ஆசிரியர் கணேசன் மற்றும் மாணவி சங்கவியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications