வைரமுத்துவின் பெசன்ட் நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
கவிஞர் வைரமுத்துவின் பெசன்ட் நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவின் வீட்டை இந்து மகா சபா முற்றுகையிட போவதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினசரி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்
ஆண்டாள் குறித்து வைரமுத்து சில ஆய்வறிக்கைகளை மேற்கொள் காட்டி பேசினார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆண்டாளை தவறாக சித்தரிக்கும் விதமாக வைரமுத்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. எனினும் வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளன. இந்து மகா சபை என்ற அமைப்பு வைரமுத்துவின் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications