For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”ஹையோ என் துணிமணியைக் காணும்”-பழனியில் கலகல புகார்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: துவைத்து காயப்போட்ட துணிகளை காணவில்லை என்ற புகாருக்கு விரைவாக செயல்பட்டு காணமல் போன துணிகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர் பழநி காவல்துறையினர்.

பழநியில் பெண் ஒருவர் வீட்டில் காணாமல் போன துணிகளை போலீசார் கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.

பழநி ஆர்.எப்.ரோட்டை சேர்ந்தவர் அபி. இவர் தனது வீட்டின் முன்பு துணியை துவைத்து காயப்போட்டுள்ளார். மாலையில் பார்த்தபோது காணவில்லை.

தோய்த்த துணிகளை காணும்:

காணாமல் போன துணிகளை கண்டுபிடித்து தருமாறு "ஆன்லைன்"இல் திண்டுக்கல் எஸ்.பி.ஜெயச்சந்திரனுக்கு புகார் அனுப்பினார். இது குறித்து பழநி போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, எஸ்.பி.உத்தரவிட்டு இருந்தார்.

ஆன்லைன் புகார்:

ஆன் லைன் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பதிலளிக்க வேண்டும் என்பதால், காயப்போட்ட துணிகளை போலீசார் தீவிரமாக தேடினர்.

பக்கத்து வீட்டில் துணி திருடன்:

இந்நிலையில், அருகில் உள்ள வீட்டில் குடியிருக்கும் ஒருவர் துணிகளை எடுத்தது தெரிய வந்தது.

வழக்கு போடவில்லை:

அவரிடம் துணிகளை மீட்ட போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புகார் கொடுத்தவர் சமாதானமடைந்ததால் போலீசார், துணிகளை எடுத்தவர் மீது வழக்குபதிவு செய்யவில்லை.

English summary
Palani police quickly found the cloth theft. They took this action immediately for online complaint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X