தேர்தல் பாதுகாப்பு... பழைய குற்றவாளிகள் 8000 பேரை பிடித்தது போலீஸ்!
கோவை: சட்டசபைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒன்றாக, பழைய குற்றவாளிகள் 8000 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சைலேந்திர பாபு பேசினார். அவர் கூறுகையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்புக்கு இதுவரை என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது? என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கோவை, நீலகிரி எல்லைகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருக்கலாம் என கருதப்படுவதால் இங்கு சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த 3 படையினர் நிரந்தர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சென்னை தவிர தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவம், முன்னாள் ராணுவ படையினர் உள்பட 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3500 இடங்கள் பதட்டமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தமிழகம் முழுவதும் அனுமதி பெற்று 22 ஆயிரம் பேர் துப்பாக்கிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 20 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பழைய குற்றவாளிகள் 8 ஆயிரம் பேரை பிடித்து ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர் என்றார் சைலேந்திர பாபு.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக திரிபாதி இருந்து வந்தார். அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அவரை மாற்றி விட்டு சைலேந்திரபாபுவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications