For Daily Alerts
Just In
குண்டுவெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸில் 2 மணிநேரம் பதுங்கியிருந்த நபரை பிடித்து விசாரணை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கவுகாத்தியில் இருந்து வந்த ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார், 12 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீசார் குண்டுகள் வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனையிட்டனர். அப்போது ரயிலில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ரயிலில் சுமார் 2 மணிநேரம் பதுங்கியிருந்த அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த நபர் குண்டுகள் வெடித்த பெட்டிக்கு அடுத்து இருந்த பெட்டிக்குள் பதுங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Chennai police have arrested a person who was hiding in the Guwahati express in which the bomb blasted today.
Story first published: Thursday, May 1, 2014, 10:45 [IST]