”புல்” மப்புடன் வேலை பார்த்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
தர்மபுரி: தர்மபுரி அருகே குடிபோதையில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் தேவராஜ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் இருந்த போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்குக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவராஜை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்ஸ்பெக்டர் அழைத்து சென்று பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் அவர் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையை இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தததை தொடர்ந்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவராஜை நேற்று எஸ்.பி. அஸ்ரா கார்க் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications