பர்கூர்: எருதுவிடும் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் -கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி
பர்கூர்: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அடுத்து தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் வட தமிழகமாக வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் எருதுவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, மாநிலத்திலிருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது காளை முட்டியதில் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய விழா மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
எருதுவிடும் விழாவை காண தமிழகம் உட்பட கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலிருந்து சுமார் 20 ஆயிரம் பேர் குவிந்தனர். இதனால் திரும்பும் திசையெல்லாம் மனித தலைகளாக தெரிந்தன. பார்வையாளர்கள் அதிக அளவில் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. ஓடிய காளை வழியில்லாமல் பொதுமக்கள் கூட்டத்தில் நுழைந்தது. இதில் காளை முட்டியதில் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
போலீசார் தடியடி
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் தடியடிக்கு பயந்து நான்கு புறங்களிலும் பொது மக்கள் ஓடினர். இதனால் எருதுவிடும் விழா சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications