மணல் திருடிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
நெல்லை: நெல்லை, பேட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மறறும் போலீசார் திருப்பணிகரிசல்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெப்போ மற்றும் டிராக்கரையும், மற்றும் அந்த வாகனங்களுக்கு முன்பாக வந்த பைக்கையும் மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது டிராக்டரில் இருந்து ஒருவர் தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கரன்திரடு பகுதியிலிருந்து ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து வாகனங்களை ஓட்டி வந்த 2 பேர் மற்றும் பைக் ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மகேஷ், மாரிக்குமார், சிஎன் கிராமத்தை சேர்ந்த கணேஷபூபதி, மாரியப்பன் என்பது தெரிய வந்தது.
இதில் கணேசபூபதி நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜாராஜன் அதிரப்படையில் காவலராக பணியாற்றி வருவதும் வாகனங்களுக்கு முன் பாதுகாப்புக்காக அவர் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய மாரியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.