குடும்பத்தோடு மாஞ்சா விற்று வந்த முதியவர், பேரன் கைது... மகன் ஓட்டம்.. வட சென்னையில் மாஞ்சா வேட்டை
சென்னை: வட சென்னைப் பகுதியை அச்சுறுத்தி வரும் மாஞ்சா தடவப்பட்ட நூல்களால் ஒரு சிறுவனின் உயிர் அநியாயமாக பறி போய் விட்டதைத் தொடர்ந்து போலீஸார் மாஞ்சா நூலுக்கு எதிரான வேட்டையில் குதித்துள்ளனர். பண்டல் பண்டலாக வைக்கப்பட்டிருந்த மாஞ்சா தடவிய நூல்களையும், மாஞ்சா தயாரிப்புப் பொருட்களும், ஆயிரக்கணக்கான பட்டங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அஜய் என்ற ஓட்டேரியைச் சேர்ந்த சிறுவன் தனது தந்தையுடன் பைக்கில் பெரம்பூர் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது மாஞ்சா தடவப்பட்ட பட்ட நூல் கழுத்தை அறுத்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட சென்னையில்தான் இப்படி அபாயகரமான முறையில் பட்டம் விடுவது அதிகம் உள்ளது. இந்த மாஞ்சா பட்டத்தை ஒழிக்க போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து போலீஸார் வேட்டையில் இறங்கினர். விசாரணையில், அம்பத்தூரை அடுத்த கொரட்டூரை சேர்ந்த குமார் (67) என்பவர்தான் பரம்பரை பரம்பரையாக மாஞ்சா தயாரிக்கத் தேவையான பொருட்களை விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. ஓட்டேரி பகுதியில் குமரன் ஸ்டோர் என்ற பெயரில் பொடி கடை நடத்தி வருகிறார் இவர்.
மாஞ்சா தயாரிக்க உதவும் கண்ணாடி தூள், வஜ்ஜிரம், கடுக்காய், ஜவ்வரிசி, கிழங்கு மாவு, கலர் பவுடர், ஊமத்தஞ்சாறு ஆகியவற்றை இவர் மொத்தமாக விற்பனை செய்கிறார். குமாருடன் அவரது மகன் முருகன், பேரன் பிரதீப் ஆகியோரும் இணைந்து இதைத் தொழிலாக செய்து வருகின்றனர்.
ஓட்டேரி, பெரம்பூர், மங்களாபுரம், ஏகாங்கிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் காற்றாடி விடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்த கடைக்கு வந்துதான் ஒட்டு மொத்தமாக வாங்கிச்செல்வர். இதையடுத்து செம்பியம் போலீசார் குமார், பிரதீப்பை நேற்று காலை கைது செய்தனர். முருகன் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.
இன்னொரு இடத்தில் இன்னொருவர் கைது
இந்த நிலையில் காசிமேடு, விநாயகபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காசிமேடு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் ஆயிரக்கணக்கான காற்றாடிகள், பண்டல் பண்டலாக மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டின் உரிமையாளர் சேகர் கைது செய்யப்பட்டார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications