குடும்பத்தோடு மாஞ்சா விற்று வந்த முதியவர், பேரன் கைது... மகன் ஓட்டம்.. வட சென்னையில் மாஞ்சா வேட்டை
சென்னை: வட சென்னைப் பகுதியை அச்சுறுத்தி வரும் மாஞ்சா தடவப்பட்ட நூல்களால் ஒரு சிறுவனின் உயிர் அநியாயமாக பறி போய் விட்டதைத் தொடர்ந்து போலீஸார் மாஞ்சா நூலுக்கு எதிரான வேட்டையில் குதித்துள்ளனர். பண்டல் பண்டலாக வைக்கப்பட்டிருந்த மாஞ்சா தடவிய நூல்களையும், மாஞ்சா தயாரிப்புப் பொருட்களும், ஆயிரக்கணக்கான பட்டங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அஜய் என்ற ஓட்டேரியைச் சேர்ந்த சிறுவன் தனது தந்தையுடன் பைக்கில் பெரம்பூர் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது மாஞ்சா தடவப்பட்ட பட்ட நூல் கழுத்தை அறுத்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட சென்னையில்தான் இப்படி அபாயகரமான முறையில் பட்டம் விடுவது அதிகம் உள்ளது. இந்த மாஞ்சா பட்டத்தை ஒழிக்க போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து போலீஸார் வேட்டையில் இறங்கினர். விசாரணையில், அம்பத்தூரை அடுத்த கொரட்டூரை சேர்ந்த குமார் (67) என்பவர்தான் பரம்பரை பரம்பரையாக மாஞ்சா தயாரிக்கத் தேவையான பொருட்களை விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. ஓட்டேரி பகுதியில் குமரன் ஸ்டோர் என்ற பெயரில் பொடி கடை நடத்தி வருகிறார் இவர்.
மாஞ்சா தயாரிக்க உதவும் கண்ணாடி தூள், வஜ்ஜிரம், கடுக்காய், ஜவ்வரிசி, கிழங்கு மாவு, கலர் பவுடர், ஊமத்தஞ்சாறு ஆகியவற்றை இவர் மொத்தமாக விற்பனை செய்கிறார். குமாருடன் அவரது மகன் முருகன், பேரன் பிரதீப் ஆகியோரும் இணைந்து இதைத் தொழிலாக செய்து வருகின்றனர்.
ஓட்டேரி, பெரம்பூர், மங்களாபுரம், ஏகாங்கிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் காற்றாடி விடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்த கடைக்கு வந்துதான் ஒட்டு மொத்தமாக வாங்கிச்செல்வர். இதையடுத்து செம்பியம் போலீசார் குமார், பிரதீப்பை நேற்று காலை கைது செய்தனர். முருகன் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.
இன்னொரு இடத்தில் இன்னொருவர் கைது
இந்த நிலையில் காசிமேடு, விநாயகபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காசிமேடு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் ஆயிரக்கணக்கான காற்றாடிகள், பண்டல் பண்டலாக மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டின் உரிமையாளர் சேகர் கைது செய்யப்பட்டார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications