ஒசூர் எல்லையில் இரு மாநில போலீஸ் குவிப்பு.. தமிழகம்-கர்நாடகா எல்லை சீல் வைப்பு #TamilNaduBandh
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக பந்த் எதிரொலியாக கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர். இரு மாநில எல்லையும் சீல் வைக்கப்பட்டதை போல காட்சியளிக்கிறது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து இன்று விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்த பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன.

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க கர்நாடக மாநில பஸ் உள்ளிட்ட எந்த ஒரு வாகனங்களையும், தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் எல்லையில் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
பெங்களூர்-ஒசூர் எல்லை, சாம்ராஜ்நகர் மாவட்ட எல்லை உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#TamilNaduBandh Heavy security deployment at Karnataka-Tamil Nadu checkpost border near Attibele pic.twitter.com/eXZ5IF2K38
— ANI (@ANI_news) September 16, 2016












Click it and Unblock the Notifications