For Daily Alerts
Just In
சென்னையில் 5 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம்
சென்னை: சென்னையில் காவல் ஆய்வாளர்கள் ஐந்து பேரை இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆறாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தற்போது சென்னையில் பணிபுரியும் 5 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் சுந்தரமூர்த்தி, கண்ணன், ஸ்ரீதேவி, வெங்கடேசன், பழனி ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது
Comments
English summary
Chennai Police Commissioner has transfer to 5 police inspectors to various place
Story first published: Tuesday, June 21, 2016, 23:49 [IST]