தமிழகத்தில் 31 டி.எஸ்.பி.க்கள் பணி இடமாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பணிபுரிந்து வந்த 31 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பணிபுரிந்து வந்த 31 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
திருவல்லிக்கேணி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி-மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
சென்னை காவல் கட்டுப்பாடு அறை உதவி ஆணையர் மோன்தாஸ்- பரங்கிமலைக்கு மாற்றம்

சென்னை பரங்கிமலை உதவி ஆணையர் ரவிசேகரன்- சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சங்கர் விழுப்புரம் டி.எஸ்.பி.யாக மாற்றம்
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் தொல்காப்பியன் நுங்கம்பாக்கத்திற்கு மாற்றம்
.மாதவரம் உதவி ஆணையர் சுப்பிரமணி கிண்டிக்கு மாற்றம்
சென்னை வடக்கு மதுவிலக்கு உதவி ஆணையர் கண்ணன் எஸ்.ஆர்.எம்.சி.க்கு மாற்றம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் திருவல்லிக்கேணிக்கு மாற்றம்
சென்னை பரங்கிமலை உதவி ஆணையர் ரவிபிரகாஷம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்ட் பிரகாஷ் எழும்பூர் உதவி ஆணையாளராக மாற்றம்
எழும்பூர் உதவி ஆணையர் குப்புச்சாமி கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.,யாக மாற்றம் உள்பட 31 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications