தேமுதிக அலுவலகத்தில் கல்வீச்சு எதிரொலி.. விஜயகாந்த் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு
சென்னை: தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து விஜயகாந்த் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமைக் கழக அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று இரவு சில விஷமிகள் கல்வீசித் தாக்கியதில் தலைமை அலுவலக கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால் கோபம் கொண்ட தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் குதிக்க முயன்றனர்.

இருப்பினும் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த நிலையில் தலைமைக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் விஜயகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டடது. சென்னை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் காமராஜ் காவல் ஆணையரிடம் மனு அளித்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications