கொலை மிரட்டல்கள் எதிரொலி ஜீயருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார்கள் வந்ததையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டாளை தவறாக சித்தரித்து பேசியதாக வைரமுத்து மீது ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் முதன்முதலில் உண்ணாவிரதம் இருந்தார். ஆண்டாள் சந்நிதியில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என்று கூறியவர் 2 நாட்களிலேயே உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க பிப்ரவரி 3ம் தேதி வரை ஜீயர் கெடு விதித்திருந்தார். எனினும் வைரமுத்து ஆண்டாள் சந்நிதிக்கு வந்து மன்னிப்பு கேட்காததால் மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தையும் முழுவதும் தொடராமல் பாதியிலேயே கைவிட்டார்.

சோடா பாட்டில் பேச்சு ஜீயர்
இதனிடையே திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தின் போது எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும், கல் எறியத் தெரியும் என்று ஜீயர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆண்டாள் விவகாரத்தை வைத்து வைரமுத்துவை விமர்சித்த ஜீயரே கடைசியில் சர்ச்சையில் சிக்கினார்.

வன்முறையைத் தூண்டியதாக வழக்கு
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஜீயர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடம் நீதிமன்றம் விளக்கமும் கேட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு
மனு கடைசியாக விசாரணைக்கு வந்த போது புகார் மீது முகாந்திரம் இருந்தால் சடகோப ராமானுஜ ஜீயர் மீது வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் திருச்செங்கோடு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜீயர் எல்லாவற்றையும் ஆண்டாள் பார்த்துக் கொள்வார் என்று கூறி இருந்தார்.

மிரட்டல்கள் எதிரொலியால் பாதுகாப்பு
இந்நிலையில் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மற்றும் செல்போன் மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications