10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு
சென்னை: சென்னையில் 10ம் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி காதலித்து அவர்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை 'பேஸ்புக்கில் வெளியிட்ட காதல் மன்னனை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் கன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று இரவு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், தனது மகளின் ஆபாச புகைப்படத்தை சாமுவேல் என்ற இளைஞர் தனது 'பேஸ்புக்'கில் வெளியிட்டுவிட்டார். அந்த இளைஞர் எனது மகளை காதலிப்பதாகச் சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது பேஸ்புக்கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார்.
இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட சாமுவேல் என்ற இளைஞரை அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது. அவர் தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.
போலீஸ் விசாரணையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி உல்லாச லீலைகளில் காதல் மன்னன் சாமுவேல் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. காதல் மன்னன் சாமுவேல் பிடிபட்டால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications