தொடரும் எதிர்ப்பு: இயக்குநர் ஷங்கர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐ படத்தில் தங்களை மோசமாக சித்தரித்துவிட்டதாக திருநங்கைகள் தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருவதால், இயக்குநர் ஷங்கர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'ஐ' படத்தில் திருநங்கை ஒருவர் வில்லி பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கேரக்டர் படு மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டு கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஷங்கர், விக்ரம், சந்தானம் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவற்றை ஏற்க மறுத்தால் சென்னை தி.நகரில் உள்ள ஷங்கர் வீட்டை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
எனவே ஷங்கர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications