பெண் எஸ்ஐ புகார் எதிரொலி: விஷ்ணுபிரியா வழக்கில் விசாரிக்கப்பட்ட வக்கீல் மாளவியா கைது
மதுரை : டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் விசாரணை செய்யப்பட்ட வக்கீல் மாளவியாவை பெண் எஸ்ஐயின் புகாரின்பேரில் மதுரை மதிச்சியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த ஆண்டு மர்மமான தூக்கு போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் விஷ்ணுபிரியாவின் நண்பர் என்ற முறையில் உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் மாளவியாவிடம் சிபிசிஐடி போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மதுரை அவனியாபுரம் பெண் சப் இன்ஸ்பெக்டர் சத்யபாமாவின் புகாரின்பேரில் வழக்கறிஞர் மாளவியாவை மதிச்சியம் போலீசார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் சத்யபாமா,27 சில நாட்களுக்கு முன்பு இரவு இரு சக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனை சாலையில் சென்றார். பின்தொடர்ந்த மதுரை வழக்கறிஞர் மாளவியா, 35 சப் இன்ஸ்பெக்டரை முந்திச்சென்று வழிமறித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக சத்யபாமா மதிச்சியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் சில மாதங்களுக்கு முன், வழக்கு தொடர்பாக மதுரை நீதி மன்றத்துக்கு வந்தபோது, மாளவியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரைவிட்டு விலகினேன். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற என்னை வழிமறித்து தகராறு செய்தார். என்னை கீழே தள்ளியதில் காயம் ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக மதிச்சியம் இன்ஸ்பெக்டர் சாந்தி, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, மாளவியாவை நேற்று முன்தினம் கைது செய்தார்.
முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்ததாக ஜீப் டிரைவர் பால்பாண்டி புகார் கொடுத்தார். அரசு சொத்தை சேதப்படுத்தியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கை போலீஸார் பதிந்தனர்.
நீதிமன்றத்தில் மனு
இதனிடையே போலீஸார் தன்னைத் தாக்கியதாகவும், தன்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடக் கோரியும் மாளவியா உயர் நீதிமன்றகிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், மதுரை சிறையில் அடைக் கப்பட்டுள்ள மனுதாரர் மாளவியாவை பார்வையிட்டு அவரது உடல் நிலையை பரிசோதித்து இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட மாளவியா, டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டவர். அப்போது, போலீஸார் தன்னை மிரட்டுவதாகக் கூறி, தற்கொலைக்கு முயன்றதாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாளவியா, டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலைக்கு தான்தான் காரணம் என்ற ஒத்துக்கொள்ளச் சொன்னார்கள். நான் மறுத்தேன் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று கூறினார் மாளவியா.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications