For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”எங்கே போகிறது உலகம்? - பேஸ்புக் லவ்வால் ஏமாந்த எஸ்.ஐ மகள்”

Google Oneindia Tamil News

Police SI's daughter cheated by Facebook lover….
நாமக்கல்: ஃபேஸ்புக்கில் காதலித்த போலீஸ் எஸ்.ஐ மகளை ஏமாற்றி விட்டதாக காதலன் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார் எஸ்.ஐயின் மகள்.

நாமக்கல் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. ராமசாமி இவரது மகள் ராதிகா என்ஜினியரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சேலம் நகரை ஒட்டி அமைந்துள்ள கோம்பைபட்டி மணியன்கரட்டை சேர்ந்தவர் என்ஜினியர் ஜெயபிரகாஷ்.ஃபேஸ்புக் மூலம் ஜெயபிரகாஷூம், ராதிகாவும் நண்பர்களாகினர். பின்னர் இருவரும் காதலித்தும் பின்னர் இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றித்திரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜெயபிரகாஷ் வீட்டு முன் ராதிகா அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை ஜெயப்பிரகாஷ் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார். அவரைத்தவிர வேறு யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி தர்ணா செய்தார்.

இதையடுத்து ஜெயப்பிரகாஷின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். அப்போது ராதிகாவை ஜாதி பெயர் சொல்லி ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர் திட்டினர்கள் என்று கூறிய ராதிகா சேலம் டி.ஐ.ஜி. அமல்ராஜிடம் புகார் செய்தார்.

புகாரின் பேரில் அம்மாபேட்டை மகளிர் போலீஸார் விசாரணை நடத்தும்படி டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். அம்மாபேட்டை மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ஜெயப்பிரகாஷ் அவரின் தந்தை லட்சுமணன் , தாய் சாந்தி ஆகியோர் மீது ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக வழக்குபதிவு செய்துள்ளனர்.

English summary
A police man’s daughter loved a boy through face book and that boy cheated her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X