சசிகலா புஷ்பா மீதான வேலைக்காரப் பெண்களின் புகார்... விசாரணையைத் துவக்கினார் ஏஎஸ்பி
தூத்துக்குடி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா எம்பி மீது அவரது வீட்டில் வேலை பார்த்த இரண்டு பெண்கள் அளித்துள்ள புகார் குறித்து போலீசார் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும் ராஜ்யசபாவில் அழுது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மீது, அடுக்கடுக்கான புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்த நெல்லை திசையன்விளையை சேர்ந்த பானுமதி என்பவர் தனது சகோதரி ஜான்சிராணியுடன் சேர்ந்து வந்து கடந்த சில தினங்களுக்கு தூத்துக்குடி எஸ்பி அலுவலக்தில் புகார் செய்தார். அதில் சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் உள்ளிட்டோர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சசிகலா புஷ்பா தங்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த புகாரை விசாரிக்க ஏஎஸ்பி தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் தங்களது முதல் கட்ட விசாரணைய துவங்கியுள்ளனர். இதுகுறித்து எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கூறுகையில், 'சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் மீதான புகார் குறித்த விசாரணை ரூரல் ஏஎஸ்பி தீபா கனிட்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும். புகாரின் அடிப்படையில் முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிவு செய்யப்படும்' என்றார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா மீது மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மேலும் புகார்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு காலம் அவரின் அரசியல் பலம் அறிந்து புகார் கொடுக்க பயந்தவர்கள் இப்போது வெளியே வர தொடங்கியுள்ளனர். இதனால் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications