அப்ரூவராகும் காசா கிராண்டே அனிருதன்! ஓபிஎஸ், நத்தம் அண்ட் கோ 'ஷாக்'
நிலமோசடி புகாரில் சிக்கிய காசா கிராண்டே நிறுவன எம்டி அனிருதனிடம் ஓபிஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதில் மும்முரம் காட்டப்படுகிறதாம்.
சென்னை: நிலமோசடி புகாரில் சிறையிலடைக்கப்பட்டுள்ள காசா கிராண்டே எம்.டி. அனிருதனிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதில் போலீசார் முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் முன்னணி கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே எம்.டி. அனிருதன் அண்மையில் நில மோசடி புகாரில் சிக்கினார். அப்போதே நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர் ஆகியோரும் சிக்குவார்கள் என கூறப்பட்டது.

ஓபிஎஸ், நத்தம் மகன்கள்
காசா கிராண்டே நிறுவனத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் மகன்கள்தான் பெருமளவு முதலீடு செய்துள்ளனராம். அதேபோல் அதானி குழுமத்தின் சோலார் நிறுவனத்துக்காக அனிருதனும் நத்தம் விஸ்வநாதன் மகன் அமரும் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை அரசு அதிகாரிகள் உதவியுடன் கையகப்படுத்தியிருந்தனர்.

அனிருதன் கைது
இந்த நிலையில்தான் நிலமோசடி புகாரில் அனிருதன் சிக்கினார். உடனே அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

வாக்குமூலம்
தற்போது அனிருதனிடம் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதில் போலீசார் மும்முரமாக இருக்கின்றனராம்.

அப்ரூவராகிறார் அனிருதன்
அதுவும் தினகரன் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள்தான் அனிருதனிடம் வாக்குமூலத்தை வாங்கிவிட வேண்டும் என்பதில் துடிக்கின்றனராம். இப்படி ஒரு வாக்குமூலம் வாங்கிவிட்டால் தங்களை புனிதர்கள் போல காட்டிக் கொள்ளும் ஓபிஎஸ் அணிக்கு செக் வைத்ததாகிவிடும் என்பதுதான் தினகரன் அண்ட்கோவின் திட்டமாம். அனிதருனும் வழக்குகளில் சிக்காமல் இருக்க அப்ரூவராகிவிடுவார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications