முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி பரப்புபவர்கள் கண்காணிப்பு - சென்னை போலீசார்
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வநர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவோரைக் கண்காணித்து வருவதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.
முதல்வரின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறது. ஆனால் முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தியாக தினமும் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக வாட்ஸ்ஆப்பில் இந்த தவறான தகவல்கள் அதிகளவில் பரவுகின்றன. இதுதான் அதிகாரப்பூர்வ செய்தி என முதல்வர் குறித்த ஒரு செய்தியை நேற்று முன் தினத்திலிருந்து பரப்பி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் தனது முகநூலில், ஜெயலலிதா உடல்நிலை பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தவறான தகவல்களை பரப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை நகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பிட்ட சில பேர்தான் இதுபோன்ற வதந்தியைப் பரப்பி வருகிறார்கள் என்பதை போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications