ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார் பத்திரிகையாளர் ஞாநி!
Subscribe to Oneindia Tamil

ஆம் ஆத்மி கட்சியின் அதன் பிரசார ஒருங்கிணைப்பாளர் டேவிட் வருண்குமார் முன்னிலையில் இணைந்த ஞாநி, திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு ஆம் ஆத்மி கட்சியில் இருக்கிறது. தமிழகத்தில் ஆம்ஆத்மி கட்சி மாற்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாற்றத்தை நோக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் மற்றும் அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றார்.
ஆம்ஆத்மி பிரசார ஒருங்கிணைப்பாளர் டேவிட் வருண்குமார் கூறும்போது, தமிழகத்தில் 15-ல் இருந்து 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். இதற்கான வேட்பாளர் பட்டியல் வரும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றார்.
இதனிடையே மத்திய சென்னை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு எதிரான ஞாநியை ஆம் ஆத்மி வேட்பாளராக நிறுத்தக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications