நெல்லை அருகே பாலிடெக்னிக் மாணவர்களிடையே மோதலால் பதட்டம்
நெல்லை: நெல்லை அருகே நேற்றிரவு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு குண்டல் தெருவை சேர்ந்தவர் சுமிதன். ராஜா தெருவில் குடியிருப்பவர் அஸ்வின், ராபின். இவர்கள் மூவரும் செய்துங்கநல்லூரில் உளள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். தினமும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.
ஒரே கல்லூரியில் படித்த போதும் 3 பேரும் அடிக்கடி மோதி கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த மோதல் தொடங்கி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு சுமிதன் அதே தெருவில் உள்ள செல்போன் கடைக்கு ரீ சார்ஜ் செய்ய சென்ற போது அங்கு நின்ற அஸ்வின், ராபின் இருவரையும் கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கல், மற்றும் தடி கொண்டு சுமிதனை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டிஎஸ்பி கனகராஜ், குலசேகரபட்டிணம் எஸ்ஐ குமாரமுத்து, மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மேற்படி இரண்டு மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications