தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது.. பொன் ராதாகிருஷ்ணன் பொளேர்!
தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கோடநாடு பங்களா மர்மம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஆனால், தமிழக அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றும் பொன் ராதாகிருஷ்ணன் துரிதப்படுத்தினார்.
அ.தி.மு.க வினருக்குள் பிரச்னை வந்து ஆட்சி வீழ்ந்தால் அது அவர்கள் பிரச்னை என்றும் அவர் கூறினார். ஒரு இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டால், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட மாட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரியில் இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் கலவரம் நடக்க வாய்ப்புண்டு என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று கூறிய அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications