யாரையோ காப்பாற்ற தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு.. பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
திருச்சி: யாரையோ காப்பாற்ற ஆந்திர போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "ஆந்திர அரசு நினைத்திருந்தால், மரம் வெட்டிய தொழிலாளர்களை உயிரோடு பிடித்திருக்கலாம். ஆனால் யாரையோ காப்பாற்ற 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொண்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில், ஏழை தொழிலாளர்கள் பிழைப்பு நடத்த தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தமிழகத்தில் அச்சமில்லாத தேர்தல் அதிகாரிகள் தேவை. அப்போதுதான், தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்தியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியுடன், பாஜக கூட்டணி வைத்துள்ளது. ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்ற சந்திரபாபு நாயுடு ஆதரவு, பாஜகவுக்கு தேவைப்படுகிறது. இருப்பினும், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஆந்திர போலீஸ் துப்பாக்கி சூட்டை முதலில் கண்டித்தார். இருப்பினும், மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் இப்போதுதான் வலுவாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications