சுரேஷ் குமார் படுகொலை சமூக சிந்தனையாளர்களுக்கு பேரிழப்பு – பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ் குமார் படுகொலைக்கு மத்திய இணை அமைச்சரச் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் 18-ம் தேதி சமூக விரோத வெறியாளர்களால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான துயரச்சம்பவம் கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.
சுரேஷ்குமார், இந்து முன்னணியில் பல ஆண்டுகள் சமூகப்பணி ஆற்றியவர். மறந்தும் பிறருக்கு தீங்கு நினைக்காத தூய எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவரை கொலை செய்தது சமூக சிந்தனையாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
சுரேஷ்குமார் கொலை குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இக்கொலையால் சுரேஷ்குமாரை இழந்து கண்ணீர் வடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி நண்பர்களுக்கும் தமிழக பா.ஜ.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications