விஜயகாந்த்- பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு: மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சியில் சந்தித்துப் பேசினார். அப்போது நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. குறிப்பாக தேமுதிக, மதிமக ஒரு இடம்கூட பெறவில்லை.
இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

இப்படப்பிடிப்பில் விஜயகாந்த் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள வாழக்கொம்பு நாகூர் பகுதியில் ஒரு விடுதியில் விஜயகாந்த் தங்கியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி
அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. இதையடுத்து, மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. இதற்காக அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களை சந்தித்து மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.
நன்றி தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து வருகிறார்.
விஜயகாந்துடன் சந்திப்பு
சனிக்கிழமை இரவு 11 மணி பொள்ளாச்சி வந்த தமிழக பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி அருகே வாழைக்கொம்புநாகூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் விஜயகாந்தை சந்தித்தார்.
பதவியேற்பு விழா
அப்போது நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பின் போது பிரேமலதா, தேமுதிக, பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications