காமராஜர் பற்றிப் பேச கார்த்தி சிதம்பரம் யார்?... பொன். ராதா பாய்ச்சல்
நாகர்கோவில்: பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேச கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன அருகதை உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன அருகதை உள்ளது? அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் இப்படி பேச மாட்டார்கள்.

இதனால்தான் வாசன் போன்றவர்கள் வெளியேறி உள்ளதாக நினைக்கிறேன்.
தமிழகத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பிரதமர் மோடிக்கு தெரியும். ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை மீட்க பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தார். தமிழக தலைவர்களில் எந்த ஒரு தலைவராவது ராஜபக்சேயுடன் பேச முடியுமா? மீனவர்கள் மீட்கப்பட்டதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கறுப்பு பணம் மீட்கப்படாததற்கு ராகுல் காந்தி தான் காரணம் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications