ஹோட்டலுக்கு 'காபி' குடிக்க போனபோது பொன்னையனின் காஸ்ட்லி செல்போன் 'அபேஸ்'
அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையனின் செல்போன் திருடப்பட்டுள்ளது. அவர் காபி குடிக்க சென்றபோது மர்மநபர்கள் யாரோ அவரது செல்போனை திருடியுள்ளனர்.
சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் செல்போன் திருடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரான பொன்னையனின் விலையுயர்ந்த செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக செய்திதொடர்பாளரான பொன்னையன் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஹோட்டலுக்கு இன்று காலை காப்பி குடிக்கச் சென்றுள்ளார்.

அவரது டேபிளுக்கு காபி வந்தவுடன் கையில் இருந்த தனது விலையுயர்ந்த செல்போனை டேபிள் மேல் வைத்துவிட்டு அவர் காபி குடித்துள்ளார். காபி குடித்து முடித்தவுடன் பொன்னையன் தனது செல்போனை எடுக்க முயன்றார்.
அப்போது டேபிளின் மேல் வைத்திருந்த செல்போன் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹோட்டலில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து செல்போனை திருடியவரை தேடி வருகின்றனர்.
ஆளும் கட்சி பிரமுகரின் செல்போன் ஹோட்டலில் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அதிமுக நிர்வாகிகளின் உடைமைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications