உயிருக்கு ஆபத்து: ராதாரவி மீது பூச்சி முருகன் போலீசில் புகார்
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி சார்பில் போட்டியிடும் ராதாரவி மீது மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனைச் சந்தித்து பூச்சி முருகன் புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘நடிகர் சங்கப் பிரச்சினையில் இப்போது நிகழ்ந்துள்ள இவ்வளவு மாற்றங்களுக்கும் காரணம் நான்தான் எனக் கருதி என்னை மிரட்டும் வகையில் பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பூச்சி முருகன் கூறுகையில், "நேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராதாரவி எனது பெயரை குறிப்பிட்டு நசுக்கி விடுவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
நாளை சங்க தேர்தல் நடைபெறும் நிலையில் அவரது பேச்சால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
துணை கமிஷனரிடம் அளித்த புகார் மனுவை கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் அளித்து உள்ளேன்", என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications