தூத்துக்குடியில் பல மணி நேரம் தொடர் மின்தடை- நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று இரவு பல மணிநேரம் தொடர் மின் தடை நீடித்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகர் பகுதிகளான முத்தையாபுரம், சிப்காட், அண்ணாநகர், பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் திடீர் திடீரென மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பழைய மீனாட்சிபுரம் பகுதியில் பல மணிநேரம் மின்தடை நீடித்தது. இதனால் முதியோர்கள், குழந்தைகள் பரிவித்தனர்.
கொளுத்து வரும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகரித்து இரவிலும் நீடிப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மின் வாரியத்தை தொடர்பு கொண்டும் சரியான பதில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ரேணியல் ஜேசுபாதம் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications