மின்தடை: ரயில்கள் தாமதத்தால் மக்கள் அவதி
சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட பல்வேறு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று காலை திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சிக்னல் கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதே போன்று செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக அலுவலகம் செல்வோர், மாணவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து சென்னை திரும்புபவர்கள் என வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
நீண்ட நேரமாகியும் மின்தடை முழுமையாக சரி செய்யப்படாத போதும், அந்த வழித் தடத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப் பட்டு வருகின்றன. அச்சரப்பாக்கத்தில் ஏற்பட்ட மின்கோளாறு காரணமாகவே இந்த மின் தடைப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் இப்பிரச்சினை சரி செய்யப்பட்டு ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications