தமிழக மின் பற்றாக்குறையை தீர்க்க 4 ஆயிரம் மெகா வாட் மின் திட்டங்கள் தயார்
நெல்லை: தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுபாட்டை போக்க 4 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மின்தேவை நாள் ஓன்றுக்கு 12900 மெகா வாட்டாக உள்ளது. ஆனால் உற்பத்தியோ 11500 மெகா வாட்டாக உள்ளது. சுமார் 1400 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிலையில் காற்றாலை மற்றும் அதிகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள நம்பிக்கையின் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் மின்வெட்டு முற்றிலும் நீக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
காற்றாலை உற்பத்தி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்று அதிகம் வீசுவதால் காற்றாலை மூலம் சுமார் 4 ஆயிரம் மெகா வாட் வரை மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மின்வெட்டு ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது காற்று சீசன் தொடங்கியுள்ளதால் நாள்தோறும் சுமார் 2500 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
அனல்மின்நிலையங்கள்
இந்த நிலையில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் 660 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இதே உற்பத்தி திறனில் மற்றொரு அனல் மின் நிலையமும் அமைக்கப்படுகிறது.
4 திட்டங்கள் 4,180 மெகாவாட் மின்சாரம்
ராமநாதபுரம் உப்பூரில் 3வது மின் உற்பத்தி திட்டத்தில் 2 யூனிட்டுகளில் சுமார் 800 மெகா வாட் அளவுக்கு பணிகள் நடந்து வருகின்றன. வடசென்னையில் 800 மெகாவாட்டுக்கு 4வது யூனிட்டும் நிறுவ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நாலு திட்டங்கள் மூலம் 4 ஆயிரத்து 180 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.32000 கோடி
இதற்கு ரூ.32 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதனால் வரும் மாதத்தில் இருந்து மின்சாரம் தாராளமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுவதால் மின்தடை இனிமேல் இருக்காது என்று கூறப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications