வேலைக்கு போகாத கணவன் – ரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி மனைவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் கணவனின் பொறுப்பற்ற தன்மையால் கர்ப்பிணி மனைவி ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் அருகே உள்ள ரயில் தண்டவாளப்பகுதியில் நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த அந்த பகுதியினர் திருச்சி ஜங்சன் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்திய போது தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் உள்ள கோமங்கலம் பகுதியை சேர்ந்தபொன்னர் என்பவரது மனைவி செல்லமணி என்பது தெரியவந்தது.

கணவர் சரிவர வேலைக்கு செல்லாததால் மணம் உடைந்த செல்லமணி ரயில் முன் பாய்ந்து இன்று காலையில் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

தற்கொலை செய்து கொண்ட செல்லமணிக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும் தற்போது 7 மாத கர்ப்பிணியாக அவர் உள்ளார் என்பது பரிதாபமான செய்தியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+