திமுகவை விஜயகாந்த் விமர்சிக்கவில்லை, ஆனால் பிரேமலதா திட்டியிருக்கிறாரே.. அப்படியென்றால்?
சென்னை: உளுந்தூர்ப்பேட்டை தேமுதிக மாநாட்டின் சாராம்சம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் எதுவுமே புலப்பட மாட்டேன் என்கிறது. அந்த அளவுக்கு விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவின் பேச்சுக்கள் குழப்பமாகவே உள்ளன.
இந்த மாநாட்டில் விஜயகாந்த் அதிமுகவைக் கடுமையாக சாடிப் பேசினார். அதேபோல பிரேமலதாவும் பேசினார்.
விஜயகாந்த் திமுகவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜக குறித்துப் பேசவில்லை. ஆனால் பிரேமலதா, திமுகவை சாடிப் பேசினார். தேமுதிகவை அழிக்கப் பார்க்க கட்சி என்று திமுகவை கடுமையாகவே சாடினார்.
இப்படி இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பேசியிருப்பதால் இவர்கள் யார் பக்கம் சாதகப் பார்வை பார்க்கிறார்கள் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆவேச விஜயகாந்த்
விஜயகாந்த் மாநாட்டில் மிக ஆவேசமாக அதிமுக ஆட்சியை விமர்சித்துப் பேசினார். போலீஸைத் தாக்கினார், அதிமுக ஆட்சியைத் தாக்கினார்.

திமுகவை மறந்தார்
ஆனால் தப்பித் தவறிக் கூட திமுக குறித்து அவர் எதுவும் பேசவில்லை. விமர்சிக்கவும் இல்லை.

குத்திக் காட்டிய பிரேமலதா
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திமுகவையும் அவர் விடவில்லை.எப்படி அதிமுகவை சாடினாரோ அதே போல திமுகவையும் அவர் சாடினார்.

பாஜகவை மட்டும் திட்டவி்ல்லை
அதேசமயம், விஜயகாந்த்தைப் போலவே பிரேமலதாவும் பாஜக குறித்துப் பேசவில்லை. கணவனும், மனைவியும் இந்த விஷயத்தில் மட்டுமே ஒரே மாதிரியாகப் பேசினர்.

திமுக மீது பிரேமலதாவுக்கு கோபம் ஏன்
பிரேமலதா பேச்சில்தான் திமுகவை அதிகம் சாடினார். 2ஜி குறித்துப் பேசினார், தேமுதிகவை அழிக்க நினைத்த கட்சி திமுக என்றார். இதை திமுக தரப்பில் ரசிக்கவில்லை என்கிறார்கள்.

விருப்பமே இல்லாத விஜயகாந்த்
உண்மையில் தி்முகவுடன் கூட்டு சேருவதில் விஜயகாந்த்துக்கும் கூட விருப்பம் இல்லை என்றே சொல்கிறார்கள். இதனால்தான் அவர் தேவையில்லாமல் அந்த நிபந்தனை இந்த நிபந்தனை என்று சொல்லி காலம் கடத்துகிறார் என்றும் விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

பிரேமலதா முடிவு செஞ்சுட்டா
அதேசமயம், பாஜக கூட்டணி என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறாராம். மனைவி சொல்லை விஜயகாந்த் மதிப்பார் என்பதால் பாஜக பக்கம் அவர் சாய்வதே நடக்கும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
இவங்க ஏதாவது ஒரு முடிவு எடுத்து அதை அவர்களே அறிவிக்கும் வரை எதுவுமே தெளிவாக இருக்காது... என்பதை இந்த உளுந்தூர்ப்பேட்டை கூட்டமும் நிரூபித்துள்ளது.












Click it and Unblock the Notifications