துரைமுருகன்..பச்சைபுள்ள மாதிரி நடிக்கிறாரு..ஈடி ரெய்டு போங்க..போட்டு கொடுக்கும் பிரேமலதா விஜயகாந்த்!
செங்கல்பட்டு: கனிமவளத் துறை முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வீட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக தற்போது சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னமும் நேரம் இருக்கிறது. நாங்களும் பூத் கமிட்டி வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட 3-வது பெரிய கட்சி தேமுதிக. தேர்தல் நெருங்கும் போது யாருடன் கூட்டணி, எத்தனை சீட், எந்த தொகுதிகள் என்பதை விஜயகாந்த் அறிவிப்பார்.
தேமுதிகவில் யாருக்கு என்ன பதவி என்பதை விஜயகாந்த் மட்டுமே முடிவெடுப்பார். எனக்கே 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கட்சிப் பதவி கொடுத்தார். எங்கள் மகன் விஜய பிரபாகரனுக்கு என்ன பதவி, அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பதை விஜயகாந்த் முடிவெடுத்து நேரம் வரும் போது அறிவிப்பார்.

கனிமவள கொள்ளை: தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளையை நினைத்தாலே அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆலங்குளத்தில் தேமுதிக போராட்டமும் நடத்தினோம். தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணலும் கனிமவளங்களும் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை பொழிவே பாதிக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்துங்க: இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி கேட்டால் தமக்கு எதுவும் தெரியாது என பச்சை புள்ளை போல நடிக்கிறார். அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலில் அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு ரெய்டு போக வேண்டும். அவரிடம்தான் விசாரணை நடத்த வேண்டும். அவர் எதுவும் தெரியாது என ஏமாற்றுகிறார். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஒரே ஒரு லாரி மணலை கொண்டு வந்துவிட முடியுமா? வரவாய்ப்பே இல்லை. அவர்கள் இயற்கை வளத்தைப் பாதுகாக்கின்றனர். தமிழ்நாடு மட்டும்தான் லஞ்சம், ஊழல், கொள்ளை என கெட்டு குட்டிச்சுவராகி கிடக்கிறது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications