For Quick Alerts
For Daily Alerts
Just In
அதிமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கு: பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கிய ஹைகோர்ட்
சென்னை: அதிமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிப்பாளையத்தில் வறட்சி நிவாரண நிதி பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தவறாக பேசினார் என்று கூறி அவர் மீது அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து பிரேமலதா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அவர் இந்த வழக்கில் தேவைப்படும் போது எல்லாம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
DMDK chief Vijayakanth's wife Premalatha has got anicipatory bail from Chennai high court in a case filed by an ADMK functionary.
Story first published: Monday, April 28, 2014, 18:20 [IST]